Monday, August 30, 2010

டெக் மஹிந்த்ராவில் இருந்து விலகினார் சஞ்சய் கல்ரா

சென்னை, ஆகஸ்ட், 29:
 டெக்  மகிந்திரா  நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் கல்ரா தற்போது அந்த பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். ஆறு ஆண்டுகள் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த கல்ராவின் இந்த விலகல் வணிக உலகின் புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது.

சஞ்சய் கல்ரா


சத்யம் நிறுவன மோசடி வெளி வந்த நேரத்தில், குறிப்பாக அந் நிறுவனத்தை டெக் மகிந்திரா கையகப்படுத்தியபோது கல்ராவின் பங்களிப்பு மிகவும் கவனம் பெற்றது. இணைப்புக்குப் பிறகு தற்போது அவர் மஹிந்த்ராவை விட்டு விலகு வது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இவரது  விலகலை அடுத்து நிறுவனத்தின் தற்போதைய துணைத்தலைவராக இருக்கும் வினீத் நய்யார் தலைமை செயல் அதிகாரி பொறுப்பை ஏற்கிறார். இவர்கள் இருவருமே முன்னாள் ஹெச்.சி.எல். நிறுவன ஊழியர்கள் என்பதும் குறிப்பிட வேண்டிய செய்தி.



website-hit-counters.com
Provided by website-hit-counters.com site.

Friday, August 27, 2010

வருமான வரி உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக உயருகிறது

புது டில்லி, ஆகஸ்ட், 27:

மாதச் சம்பளதார்களுக்கு வருமான வரி உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட இருக் கிறது. இன்றைய நிலையில்  ஆண்டுக்கு ரூ. 1.60 லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு வரி விலக்கு கிடைத்து வருகிறது. அதற்கு  மேல்-ரூ. 5 லட் சம் வரை வாங்கு வோருக்கு 10 விழுக்காடு  வரி விதிக்கப் படுகிறது. 5 முதல் 8 லட்சம் வரை ஊதியம்  பெறுவோ ருக்கு 20 விழுக்காடும்,  8 லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுவோ ருக்கு 30 விழுக்காடும் வரி விதிக் கப்படுகிறது.

இது கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது:

ரூ.2 லட்சம்  - ரூ.5  லட்சம் -10%
ரூ.5 லட்சம்  - ரூ.10 லட்சம் -20%
ரூ.10 லட்சம் : 30%

மூத்த குடிமகன்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ. 2.5 லட்சமாக உயர இருக்கிறது.
இது தவிர   வீட்டுக் கடன்களுக்கான வட்டிக்கு அதாவது ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு  தொடர்ந்து நீடிக்கும். ஜிபிஎப், பிபிஎப், ஆர்பிஎப் ஆகியவற்றின் மீதான சலுகைகள் தொடர்ந்து நீடிக்கும்.இந்த முடிவுகளுக்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. திங்களன்று இது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும்.

இலவச தொலைபேசி அழைப்பு வசதி: தருகிறது கூகுள்

நியூயார்க், ஆகஸ்ட், 26 ,2010:

இணையதள நிறுவனங்களில் மிகப்பெரிய சேவை நிறுவனமான கூகுள், தனது  ஜிமெயில் வாயிலாக தொலைபேசி சேவையை துவக்கி உள்ளது. கூகிளின்  இந்த சேவையை பெற விரும்புவோர், தங்களது  ஜிமெயில் கணக்கிற்குள் செல்ல வேண்டும். அங்கு இடப்புறத்தில் உள்ள  'கால்'  அல்லது ' சாட்'  என்ற பிரிவிற்கு சென்று சொடுக்க வேண்டும்.  அமெரிக்கா,  கனடா நாடுகளுக்கு இலவசமாகவும், மற்ற நாடுகளுக்கு, குறைந்த கட்டணத்திலும் தொலைபேசி அழைப்புகளை இந்த சேவை மூலம் செய்ய முடியும். அதே போல அரட்டை பிரியர்கள் வீடியோ சாட் செய்யவும் இந்த சேவை உதவும். 

இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய வங்கி வந்தாச்சு!



மும்பை, ஆகஸ்ட் 27:


நாட்டிலேயே முதன் முறையாக ஆஸ்த்ரேலியா நாட்டு  வங்கி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் பேங்க் ஆப் ஆஸ்தி‌ரேலியா என்ற பெயரில் இது துவக்கப்பட்டிருக்கிறது.  இது இந்தியாவில் துவங்கப்பட்டுள்ள முதல் ஆஸ்திரேலிய வங்கி ஆகும். இந்தியா, சீனா, இலங்கை, இந்தோனேஷியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் நடத்திய ஆய்வின் அடிப்படையிலேயே, இந்தியாவில் ‌வர்த்தக செயல்பாட்டினை துவங்க முடிவு எடுத்ததாகவும் அந்த வங்கி தெரிவித்திருக்கிறது.

Wednesday, August 25, 2010

இந்தியாவில் கீழ் நடுத்தர குடும்பங்கள்தான் அதிகம்-ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வு முடிவு

புது டில்லி, ஆகஸ்ட் 25 :

ஆசியாவில் மத்திய தர வர்க்க குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவிதுள்ள்ளது. அடுத்த  20 ஆண்டுகளில் அமெரிக்க , ஐரோப்பிய மதிய தர வர்க்க குடும்பங்களின்  இடத்தை  ஆசியர்கள் பிடித்து விடுவார்கள் என்றும் அது தெரிவித்துள்ளது. அவ்வங்கியின் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :


 இந்தியாவில் 82  விழுக்காடு நடுத்தர வர்க்க குடும்பங்களின்  . 1000 முதல் ரூ. 2000 வரை இருக்கிறது. . அதேசமயத்தில் , ரூ. 10,000 மேல் வருமானம் பெறுபவர்  செல்வந்தர் என்று அழைக்கப் பெறுகிறார்கள்.  மாதம் ரூ.1,035ல் இருந்து ரூ.2,070 வரை ஊதியம் ஈட்டுபவர்களை கீழ் நடுத்தர வர்க்கம்  என்றும், ரூ.2070ல் இருந்து ரூ.5,177 வரை சம்பாதிப்ப வர்களை நடுத்தர மத்திய வர்க்கம் என்றும், ரூ. 5177ல் இருந்து ரூ.10,354 வரை சம்பாதிப்பவர்களை உயர் நடுத்தர வர்க்கம்  என்றும் அதில் வகைப்படுத்தி இருக்கிறார்கள். ஆக,  ரூ. 10,354 சம்பாதிப்பவர்கள் செல்வந்தர்கள் என்று ஒரு புதிய வரைவிலக்கணத்தை ஆசிய வளர்ச்சி வங்கி கொடுத்திருக்கிறது.   நம் நாட்டில்  82 விழுக்காடு பேர் (22.40 கோடி பேர்) கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்கிறது அந்த ஆய்வு.

Monday, August 23, 2010

புதுக்கோட்டையில் பாரத மிகு மின் நிறுவனத்தின் புதிய பிரிவு


புது டில்லி, 23 
 பாரத மிகு மின் நிறுவனம் (பி.எச். எ.எல்), புதுக்கோட்டை  புதிய உற்பத்தி பிரிவுகளை தொடங்க இருக்கிறது. இந்த தகவலை  மத்திய கனரக தொழிற்சாலை துறை அமைச்சர் அருண் யாதவ், நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள விவரம்:
'' புதுக்கோட்டையில் புதுடில்லி யூனிட்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், புதுக்கோட்டையில் ரூ. 293 கோடி மதிப்பீட்டில்  ஒரு உற்பதிப்பிரிவு அமைக்கப்பட உள்ளது. இது 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும்'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sunday, August 22, 2010

சிறுதொழில் முனைவோருக்கு உதவ கால் சென்டர்

புது டெல்லி, ஆகஸ்ட், 22 :
புதிய சிறு தொழில் முனைவோரை ஊக்குவிப்போருக்காக 'உதயமி ஹெல்ப் லைன் ' என்ற பெயரில் அழைப்பு மையத்தை (கால் சென்டர்)  குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம் துவக்கியுள்ளது. இந்த மையத்தை புது டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்க் திறந்து வைத்தார். சிறு தொழில் முனைவோர் இந்த மையத்தின் 1800 -180 -6763 என்ற என்னை தொடர்பு கொண்டு தொழில் தொடங்குவது தொடர்பான ஐயங்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் விடைகளை பெறலாம். ஆண்டு முழுவதும் காலை பத்து மணி முதல் இரவு பத்து மணிவரை இந்த சேவை செயல்படும். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு சேவை ஆற்றும் அரசு அமைப்புகளின் மீதான் புகார்களையும் இந்த என்னில் தொடர்பு கொண்டு கூறலாம் என்று அரசு வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Saturday, August 21, 2010

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை கொடுத்த டிசிஎஸ்

சென்னை, ஆகஸ்ட், 21:

நாட்டிலேயே அதிக அளவாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்கிய நிறுவனம் என்ற பெயரை   டாடா கன்சல்டன்சி (டிசிஎஸ்) நிறுவனம்   பெற்றிருக்கிறது.   அந்நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி கணக்கெடுப்பின் படி 1 லட்சத்து 63 ஆயிரத்து 700 பணியாளர்கள்  பனி புரிவது கண்டறியப்பட்டுள்ளது.

அதிக பேருக்கு வேலை வைப்பு கொடுத்த விசயத்தில் இரண்டாவது இடத்தில் ஐ.பி.எம். நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் 1 லட்சத்து 55 ஆயிரம் பேர் உள்ளனர். சர்வதேச அளவில்  ஐபிஎம் நிறுவன அலுவலகங்களில் பணி புரிவோரின்  எண்ணிக்கை 4 லட்ச மாகும். இன்போசிஸ் நிறுவனத்தில் 1 லட்சத்து 14ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.

புதிய ஊழியர்களை பணியமர்த்துவதில்  ஐபிஎம்தான் முன்னணியில் உள்ளது. தனது அலுவலக பரப்பளவையும் அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது  10 லட்சம் சதுர அடிக்கு அலுவலகத்தை விஸ்தரித்துள்ள ஐபிஎம்,  3 ஆண்டுகளில், புனே, பெங்க ளூரு ஹைதராபாத் நகரங்களில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத்  தெரிய வந்துள்ளது.

Friday, August 20, 2010

5000 தொலைகாட்சி, 2000 வானொலி அலைவரிசைகள் ஒரே சாதனத்தில்!

சென்னை, ஆகஸ்டு 19, 2010:  டெக்ஸோனிக் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனம், இன்று புது வகையான மல்டிமீடியா ப்ளக் அண்ட் ப்ளே சாதனமான IRadioPOP-I -ஐ இந்தியாவில் முதன்முதலாக அறிமுகம் செய்கிறது.  இதன் வரவினால், உலகம் முழுவதுமுள்ள 20000 இணைய வழி வானொலி நிலையங்கள் மற்றும் 5000 இணையவழி தொலைக்காட்சி அலைவரிசைகளை  கேட்டும் கண்டும் மகிழலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய வானொலி நிலையங்கள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள் நாடு, வகை மற்றும் மொழிவாரியாக வகைப்பிரிக்கப்படுகின்றன. இந்த சாதனத்தை ஏதேனும் தனிநபர் கணினி  அல்லது மடிக்கணினியில்  இணையத்தில் இணைக்கப்பட்டவுடன், உங்களுக்கு  விருப்பமான வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளை மெனுப் பட்டியலில் இருந்து  தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.

“இச்சாதனம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கப் பெறுவதை உறுதி  செய்வதற்கு நாங்கள் நாட்டில் முன்னணியிலுள்ள சில சில்லறை வணிகர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுடன் கைகோர்க்க உள்ளோம். வாடிக்கையாளர்கள் தங்க ளுக்கு விருப்பமான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் வானொலி நிலையங் களையும் தங்கள் வசதிக்கேற்ப, பயணம் செய்துகொண்டிருக்கும் வேளை யிலும் கூட, கண்டும் கேட்டும் மகிழ முடியும். தற்சமயம் இந்த சாதனம் சென்னை, பெங்களூரு  , ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் கிடைக்கிறது. இதன்  விலை ரூ.1500   ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது", என்று டெக்ஸோனிக் இன்ஸ்ட்ரு மெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் நிதேஷ் பண்டாரி  கூறுகிறார்.

“இந்தியாவைப் போன்று மிக வேகமான விரிவடைந்து வரும் இணையச் சந்தை ஒன்றில், இணையத்தைப் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு மேலும் அதிகரித்து வருகிறது உத்தேச மதிப்பீட்டின்படி, இந்தியாவில் தோராயமாக 81 மில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்து கின்றனர்.  இச்சாதனத்தை செருகிய  உடனேயே, இதில் கொடுக்கப்பட்டுள்ள மெனுப் பட்டியலில் இருந்து உடனடியாக நிரல் களை தேர்வு செய்துகொள்ள முடியும். இதற்கு பதிவு அல்லது கடவுச் சொல்லோ  அல்லது எந்த வகையான மாதாந்திர கட்டணங்களோ தேவைப்படாது. ” என்றும் திரு. நிதேஷ்  பண்டாரி அவர்கள் கூறுகிறார்.

புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் சொத்து எவ்வளவு?

சென்னை, ஆகஸ்ட் 20 : அண்டை மாநிலமான புதுச்சேரி  முதல்வர் வைத்திலிங்கம் தனது சொத்து கணக்கை  வெளியிட்டிருக்கிறார். அதன்படி  வங்கியில் அவரது பெயரில் ரூ.11 லட்சத்து 85,535. மனைவி  பெயரில் ரூ.17.89 லட்சம்  , புதுவை ஸ்பின்னர்ஸ், ஆந்திரா வங்கி, ரிலையன்ஸ், இந்தியன் வங்கி உள்ளிட்டவற்றில் பங்கு பத்திரங்கள் வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.  மேலும், எல்ஐசி காப்பீடு ,  விவசாய நிலங்கள், வீடு, டிராக்டர்,இண்டிகா கார், 900 கிராம் தங்க நகைகள் இருப்பதாக மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள தகவலில்  குறிப்பிட்டுள்ளார்.

Thursday, August 19, 2010

பி.பீ.ஓ. நிறுவனங்கள் தொடங்க தமிழக அரசு மானியம்

சென்னை, ஆகஸ்ட்  19: ஊரகப் பகுதிகளில் புறங்களில் பி.பீ.ஓ. நிறுவனங்களை  தொடங்க விரும்பும் தொழில் முனைவோருக்கு மானியம் அளிக்க  உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராமப்புற பி.பீ.ஓ. நிறுவனங்களுக்கான தனி  கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
குறைந்த பட்சம்  100 ஊழியர்களுடன் 3 ஆண்டுகள் செயல்பட்டு வரும்  . நிறுவனங்களுக்கு 15 விழுக்காடு வரை மானியம்  தரப்படும்.  அதேபோல,  100 பேருக்கு 3 மாத  பி.பீ.ஓ.பயிற்சியும், பின்னர்   9 மாதங்கள் வேலை வாய்ப்பு  வழங்கும் நிறுவனத்துக்கு மானியம் அளிக்கப்படும்.  பயிற்சி பெறுவோருக்கு மாதந்திர உதவி தொகையும் உண்டு.

வட்டி வீதம் உயர்ந்தது. வீட்டுக்கடன்கள் வட்டியும் உயரும்.




மும்பை, ஆகஸ்ட்  17 : 

  நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  உட்பட பல வங்கி கள் தங்களது  வட்டி விகி தங்களை மாற்றி  உள்ளன.  அதன்படி நுகர்வோர் கடன் கள், வீட்டுக்கடன்கள் ஆகியவற்றுக்கான வட்டி வீதங்கள் அதிகரிக்க இருக்கின்றன. அதேபோல வைப்புகளுக்கான வட்டி வீதமும் உயர்த்தப்பட்டிருக்கிறது. உயர்த்தப்பட்ட்ட  வட்டி வீதங்கள்  இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்த கடன் கொள்கையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதகாக வங்கிகளுக்கான ரெப்போ ,  ரிவர்ஸ்  ரெப்போ விகிதங் களை மாற்றியமைத்து. இதனை அடுத்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா , பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி போன்ற முன்னணி வங்கிகள் தங்களது கடன் வட்டி வீதங்களை உயர்த்தி இருக்கின் றன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கடனுக்கான வட்டி வீதத்தை அரை விழுக்காடு அதி கரித்திருக்கிறது.

புதிய வட்டிவீதம் நடைமுறைக்கு வருவதால் சொந்த வீட்டு கனவில் இருப் போருக்கு இது கொஞ்சம் கூடுதல் சுமையாகத்தான்  இருக்கும் என்று தோன்றுகிறது.

சமூக தொழில் கல்லூரி-டிவிஎஸ் தொடக்கம்


சென்னை, ஆகஸ்ட் 17, 2010:
டிவிஎஸ் கல்வி சமூகம் (டிவிஎஸ்இஎஸ்), 20 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இப்போது மிகச் சிறந்த பள்ளிக்கூடம், பாலிடெக்னிக், கிராமப்புற பயிற்சி வகுப்புகளை தமிழகம், கர்நாடக மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. இப்போது டிவிஎஸ்இஎஸ் அமைப்பானது டிவிஎஸ் தொழில் கல்லூரியை (டிவிஎஸ்-விசி) மிகப்பெரிய அளவில் வானகரத்தில் உள்ள டிஎஸ் ஸ்ரீனிவாசன் பாலிடெக்னிக் மற்றும் உயர் பயிற்சி மையத்தில் அமைத்துள்ளது.

டிவிஎஸ்-விசி மையமானது முறையான கல்வியை பெறாதவர்களுக்கும் உதவும். டிவிஎஸ்-விசி கல்வித் திட்டமானது குறிப்பிட்ட துறையில் திறன் மிக்கவர்களை உருவாக்குவதாகும். தொழில் திறன் பெற்றவர்களுக்கு சான்று அளித்து உருவாக்குவதன் மூலம் அவர்களது பொருளாதார நிலை உயரும். மேலும் சமூகத்தில் அந்தஸ்தும் கிடைக்கும்.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய 85% பேருக்கு இக்கல்லூரியில் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஒரு குறிப்பிட்ட துறையில் பயிற்சி பெற விரும்புவோருக்கு அத்துறையில் பயிற்சி பெறுவதற்கான வசதியையும் டிவிஎஸ்-விசி அளிக்கிறது. இத்தகைய பயிற்சி அளிப்பதற்காக இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

“திறன் மேம்பாட்டுக்கு பல்வேறு பயிற்சித் திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் பல லட்சக் கணக்கான இளைஞர்களில் வெகு சிலரே சிறந்த வேலையைப் பெறுகின்றனர். கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் நான்கில் ஒருவர்தான் வேலைக்கான திறமையுடன் திகழ்கின்றனர். இதனால்தான் மாணவர்களை தொழில் நிறுவனங்கள் முதல் நாளிலிருந்தே தக்க வைத்துக் கொள்ள விரும்புகின்றன. மேலும் அதிகரித்துவரும் மக்கள் தொகை பெருக்கத்தால், திறமையை மென்மேலும் அதிகரித்துக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. இதனால் இதுபோன்ற திறன் மேம்பாட்டுபயிற்சிகள் இளைஞர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு மிகுந்த உதவியாக இருப்பதோடு, இதுபோன்ற தகுதிகள் தற்போதைய காலகட்டத்தில் வேலை பெறுவதற்கு மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது,” என்று டிவிஎஸ்எஸ்இஎஸ் இயக்குநர் டாக்டர் மாலினி ஸ்ரீனிவாசன் கூறினார்.


“இந்தியாவின் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் தொழில் கல்வியைப் பெறுவதற்கு எந்த ஒரு தொழில் கல்லூரியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு இந்திரா காந்திதேசிய திறந்தவெளி பல்கலைக் கழகம் ஆர்வமாக உள்ளது. டிவிஎஸ்இஸ் மையம், தரமான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அர்த்தமுள்ள ஒப்பந்தமாக டிவிஎஸ் தொழில் கல்லூரியுடனான ஒப்பந்தம் அமையும்,” என்று இந்திராகாந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் கே. பன்னீர்செல்வம் கூறினார்

தொழில்நுட்ப பயிற்சி படிப்பு
1.    இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் சான்றிதழ்
2.    சிஎன்சி புரோகிராமிங் & மெஷினிங்கில் சான்றிதழ்
3.    பிஎல்சி புரோகிராம் சான்றிதழ்
4.    “கேட்” சான்றிதழ்
5.    டூல் வடிவமைப்பு சான்றிதழ்
6.    இண்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸில் சான்றிதழ்
7.     ஃபிட்டிங் சான்றிதழ்
8.    மெஷினிங் சான்றிதழ்
9.    வெல்டிங் சான்றிதழ்
10.     வீடுகளுக்கான குழாய் அமைப்பு சான்றிதழ்
11.    வீடுகளுக்கான மின்சார வயர் அமைப்பது
12.     செல்போன் ரிப்பேரில் பட்டயபடிப்பு
தொழில்நுட்பம் சாராத படிப்பு
1.    காப்பீடு குறித்த சான்றிதழ்
2.    சில்லரை வணிக சான்றிதழ்
3.    நிதி & கணக்கியல் பட்டய படிப்பு
4.    ஹோட்டல் உள்ளிட்ட உபசரிப்புத்துறை சான்றிதழ் படிப்பு
டிவிஎஸ்-விசி பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழில் நுட்பம் அல்லாத திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்கிறது. இதில் 6 மாத சான்றிதழ் படிப்பு முதல் ஓராண்டு பட்டயப படிப்பு வரை அடங்கும். இந்த படிப்புகளில் சேர கல்வித் தகுதி 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு தேறியிருக்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட தொழிலில் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். இதில் சேர்வதற்கு வயது வரம்பு கிடையாது. பள்ளிக் கல்வியை பாதியில் நிறுத்தியவர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பு. இதன் மூலம் அவர்கள் தங்களது திறமையை மேம்படுத்திக் கொண்டு பொருளாதார ரீதியில் முன்னேற முடியும்.

டிவிஎஸ்-விசி, இதுபோன்று மேலும் மூன்று மையங்களை அமைத்து விரிவு படுத்தத் திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் தென் மாநிலங்களில் அமையும். அத்துடன் தொழில்துறை பயிற்சித் திட்டங்களை நாடு முழுவதும் கற்றுத் தருவதற்கான ஏற்பாடுகளை பல்வேறு தொழில் கல்லூரிகளுடன் செய்து கொண்டு மேலும் பல பயிற்சி வகுப்புகளைத் தொடங்கத் திட்ட மிட்டுள்ளது.

ரூபாய் குறியீட்டுடன் விசைப்பலகை: டி.வி.எஸ்.அறிமுகம்

சென்னை, 17 ஆகஸ்ட்:
தமிழகத்தின் முன்னணி கணிப்பொறி உதிரி பாக தயாரிப்பு நிறுவனமான டி.வி. எஸ். எலெக்ட்ரானிக்ஸ், நாட்டிலேயே முதன் முறையாக ரூபாய் சின்னத்தைக் கொண்ட கணிப்பொறி விசைப்பலகையை அறிமுகம் செய்திருக்கிறது. 490மிமீ நீளம், 180மிமீ அகலம் 20மிமீ  உயரம் கொண்ட இந்த விசைப்பலகை விண் டோஸ் மற்றும் லினக்ஸ்  இயக்கு மென்பொருள் உள்ள அனைத்து கணிப் பொறிகளிலும் எளிதாக இயங்கும். இதன் விலை ரூ. 1495 தான்.
டாலர், ஈரோ பணத்தைப் போல உருவாகப்பட்டுள்ள இந்த புதிய ரூபாய் குறியீட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் எழுத்துருவை மங்க ளூரை சேர்ந்த போரடியான் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. ` குறியீட்டை தட்டச்சு செய்ய விரும்புவோர், http://blog.foradian.com/rupee-font-version-30 என்ற இணைய தளத்திற்கு  சென்று இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.