Thursday, August 19, 2010
வட்டி வீதம் உயர்ந்தது. வீட்டுக்கடன்கள் வட்டியும் உயரும்.
மும்பை, ஆகஸ்ட் 17 :
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உட்பட பல வங்கி கள் தங்களது வட்டி விகி தங்களை மாற்றி உள்ளன. அதன்படி நுகர்வோர் கடன் கள், வீட்டுக்கடன்கள் ஆகியவற்றுக்கான வட்டி வீதங்கள் அதிகரிக்க இருக்கின்றன. அதேபோல வைப்புகளுக்கான வட்டி வீதமும் உயர்த்தப்பட்டிருக்கிறது. உயர்த்தப்பட்ட்ட வட்டி வீதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.
ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்த கடன் கொள்கையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதகாக வங்கிகளுக்கான ரெப்போ , ரிவர்ஸ் ரெப்போ விகிதங் களை மாற்றியமைத்து. இதனை அடுத்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா , பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி போன்ற முன்னணி வங்கிகள் தங்களது கடன் வட்டி வீதங்களை உயர்த்தி இருக்கின் றன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கடனுக்கான வட்டி வீதத்தை அரை விழுக்காடு அதி கரித்திருக்கிறது.
புதிய வட்டிவீதம் நடைமுறைக்கு வருவதால் சொந்த வீட்டு கனவில் இருப் போருக்கு இது கொஞ்சம் கூடுதல் சுமையாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment