சென்னை, நவம்பர் 14 :
போக்ஸ்கோன்ன் நிறுவனத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சிஐடியு பொது செயலாளர் கைது செய்யப்பட்டபோது கைவிலங்கிடப்படவில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியதை அ.சவுந்தரராசன் மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் விபரம் பின்வருமாறு:
சிஐடியு பொதுச்செயலாளராகிய எனக்கு கைவிலங்கிடப்படவில்லை என்று சட்ட மன்றத்தில் முதலமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியையும், வியப்பையும் அளிக்கிறது. கைவிலங்கை போலீசார் மாட்டியபோது ஏற்பட்ட மனவேதனையை விட இந்த மறுப்பு அதிக மனவேதனையைத் தருகிறது.
9-10-2010 அன்று நாங்கள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டோம். சிறையில் இருக்கும்போதே என் மீதும் சிஐடியு மாவட்டச்செயலாளர் முத்துக்குமார் உட்பட 12 பேர் மீதும் இன்னொரு வழக்கைப் போட்டு நாங்கள் அதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக எங்களுக்கு அறிவிக்கப்படடது. இந்த வழக்கில் மீண்டும் ரிமாண்ட் செய்வதற்காக என்று 13-10-2010 அன்று உத்திரமேரூர் நீதிமன்றத்திற்கு செல்வதற்காக நாங்கள் அழைத்து வரப்பட்டோம்.
13-10-2010 அன்று பகல் 1.30 மணிக்கு வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்த எங்களை இருவர் இருவராக நிற்க வைத்து கைகளில் விலங்கு மாட்டினார்கள். விலங்கு மாட்டுவது நீதிமன்ற வழிகாட்டலுக்கு எதிரானது என நான் கூறியபோது, எ°.பி. உத்தரவு என்று அதிகார தொனியில் கூறித்தான் விலங்கை மாட்டினார்கள். விலங்கு மாட்டிய நிலையிலேயே வேனில் ஏற்றப்பட்டோம். வேன் சென்று கொண்டிருந்தபோது வழியில்தான் கைவிலங்கு அகற்றப்பட்டது. நீதிமன்றத்திற்குள் செல்லும்போது கைவிலங்கு இருக்கக்கூடாது என்பதற்கான ஏற்பாடு இது.
இது தொடர்பாக சிஐடியு மாநிலக்குழு டி.ஜி.பி-க்கு புகார் செய்தது. சிறையிலிருந்தபடி நான் டி.ஜி.பி-க்கு புகார் அனுப்பியுள்ளேன். மனித உரிமை ஆணையத்திற்கும் மனு அனுப்பியுள்ளேன்.
இதுவரை என்னிடமோ, விலங்கு மாட்டப்பட்ட மற்றவர்களிடமோ யாரும் எந்த விசாரணையும் நடத்தவில்லை. ஆனால் முதல்வர் தீர்ப்பு வழங்கி விட்டார். இது என்ன நீதி பரிபாலனம்? சிறையிலிருந்து அழைத்து வருபவனுக்கு போட்டோ ஆதாரமெல்லாம் இருக்க முடியுமா?
இதேபோல் 40 கார்களை உடைத்தோம், நொறுக்கினோம் என்று முதல்வர் கூறுவதும் தவறான செய்தி. வன்முறை பழி போடும் முயற்சி. இதுவரை போடப்பட்ட மொத்த வழக்குகளிலும் 40 கார்கள் உடைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு இல்லை. ஒருவேளை இனிமேல் வழக்கு வருமோ என்ற அச்சத்தையே முதல்வரின் கூற்று உண்டாக்குகிறது. வன்முறையாளர்கள் யார் என்பதை நாடறியும். போலீசின் கூற்றையும், முதலாளிகளின் கூற்றையும் அப்படியே ஏற்றுக் கொண்டு முதல்வர் உண்மைக்கு மாறாகப் பேசியுள்ளார்.
முதல்வர் அவர்களை டி.கே. ரங்கராஜனும் நானும் சந்தித்த போது, கைவிலங்கு பற்றி நாங்களும் பேசவில்லை. அவரும் பேசவில்லை. அவர் ஏதோ இதுபற்றி விளக்கமளித்து நாங்கள் அமைதியாக இருந்தோம் என்று கூறுவது அவரது வளமான கற்பனை. இதை அரங்கேற்ற சட்டமன்றம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வரின் கூற்று உண்மைக்குப் புறம்பான திட்டமிட்ட திசைதிருப்பும் வேலையாகும். இது வன்மையான கண்டனத்திற்குரியது. போலீசார் விலங்கிட்டதை விட, இது மேலும் மோசமான செயல் என மனவேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வணிகத்தமிழ்
Monday, November 15, 2010
புற்று நோயாளிகளுக்கு வீடு தேடி சிகிச்சை
சென்னை, நவம்பர் 14 :
ஜே.கே. டயர்ஸ் நிறுவனம் கேன் கேர் அமைப்புக்கு ஒரு அவசர சிகிச்சை வாகனத்தை இலவசமாக வழங்கி உள்ளது. இதன் மூலம் புற்று நோய் பாதிப்புக்கு ஆளான ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகளுக்கு வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கப்படும். கேன் காற்றே அமைப்பு புற்று நோயாள பாதிக்கப்படவர்களுக்காக இயங்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும்.
சென்னை வடபழனியில் உள்ள குமரன் மருத்துவமனையில் நடைபெற்ற நிகளிசி ஒன்றில் ஜே.கே. டயர்ஸ் நிறுவனம் அந்த வாகனத்தை வழங்கியது. இதில் ஸ்ரீராம் குழுமத்தின் தலைவர் அகில ஸ்ரீனிவாசன், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் முதலான பலர் இதில் கலந்து கொண்டனர்.
ஜே.கே. டயர்ஸ் நிறுவனம் கேன் கேர் அமைப்புக்கு ஒரு அவசர சிகிச்சை வாகனத்தை இலவசமாக வழங்கி உள்ளது. இதன் மூலம் புற்று நோய் பாதிப்புக்கு ஆளான ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகளுக்கு வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கப்படும். கேன் காற்றே அமைப்பு புற்று நோயாள பாதிக்கப்படவர்களுக்காக இயங்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும்.
சென்னை வடபழனியில் உள்ள குமரன் மருத்துவமனையில் நடைபெற்ற நிகளிசி ஒன்றில் ஜே.கே. டயர்ஸ் நிறுவனம் அந்த வாகனத்தை வழங்கியது. இதில் ஸ்ரீராம் குழுமத்தின் தலைவர் அகில ஸ்ரீனிவாசன், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் முதலான பலர் இதில் கலந்து கொண்டனர்.
Monday, October 11, 2010
சென்னையில் லான்சன் டொயோட்டா புதிய கிளை
சென்னை, அக்டோபர் 11 :
சென்னையில் லான்சன் டொயோட்டா புதிய கிளை ஒன்றை புற நகர் பகுதியான நீலாங்கரையில் அந்நிறுவனம் திறந்துள்ளது. 31 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த புதிய கிளை, திருவான்மியூர், அடையாறு, மயிலாப்பூர் பகுதி வாடிக்கையாளர்களை குறி வைத்து தொடங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் லான்சன் டொயோட்டா புதிய கிளை ஒன்றை புற நகர் பகுதியான நீலாங்கரையில் அந்நிறுவனம் திறந்துள்ளது. 31 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த புதிய கிளை, திருவான்மியூர், அடையாறு, மயிலாப்பூர் பகுதி வாடிக்கையாளர்களை குறி வைத்து தொடங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tuesday, September 28, 2010
ஆஸ்கார்-க்கு போட்டி போட போகிறது பீப்ளி லைவ்

சென்னை, செப்டம்பர் 28 , 2010 :
கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் வாழ்க்கை அவ லத்தை சம கால விஷயங்கள் மீதான நையாண்டி யுடன் சொல்லும் ஹிந்தி படம் பீப்ளி லைவ். ஆமிர் கான் தயாரித்துள்ள இந்த படம், பாசாங்கு அரசியல் வாதிகள், எதையும் விற்று காசு பார்க்கும் ஊடக நிறு வனங்கள் என்று எல்லாரையும் வெளுத்து வாங்கு கிறது. முன்னணி நடிகர்கள் யாரும் இதில் கிடையாது என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். படம் வெளி வந்த உடன் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப் பாட்டது பீப்ளி லைவ். இப்பொது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. இந்த படம், இந்த ஆண்டின் ஆஸ்கார் விருதுக்கான வெளி நாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட தேர்ந் தெடுக்கப்பட்டு இருக்கிறது. ஆயிரம் படங்கள் வந்தாலும், மனித வாழ்வின் அவலங் கள் மட்டுமே உலகளாவிய அளவில் எளிதில் புரிந்து கொள்ளப்படும் என்றுதானோ என்னவோ இந்த படத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். பீப்ளி லைவ் படம் ஆஸ் கார் விருதை வெல்ல வணிக தமிழ் தன வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
http://www.peeplilivethefilm.com/
Friday, September 24, 2010
போக்ஸ்கன் நிறுவனத்தில் திடீர் வேலை நிறுத்தம்
சென்னை, செப்டம்பர் 24 , 2010 :
சென்னையில் உள்ள போக்ஸ்கன் நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று திடீர் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு கோரி அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அந்த நிர்வாகம், வரும் ஞாயிற்றுக் கிழமை பணிபுரிய வேண்டும் என்றும், ஒரு வாரம் வரை சம்பளம் பிடிக்கப்படும் என்றும் சொன்னதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து இன்று அங்கு ஊழியர்கள் மறுபடியும் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவன ஊழியரகளுக்கும் அந்தந்த நிறுவனங்களுக்கும் ஊதிய உயர்வு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளில் அண்மைக் காலமாக கருத்து வேறுபாடுகள் புறப்பட்ட வண்ணம் உள்ளன.
சென்னையில் உள்ள போக்ஸ்கன் நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று திடீர் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு கோரி அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அந்த நிர்வாகம், வரும் ஞாயிற்றுக் கிழமை பணிபுரிய வேண்டும் என்றும், ஒரு வாரம் வரை சம்பளம் பிடிக்கப்படும் என்றும் சொன்னதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து இன்று அங்கு ஊழியர்கள் மறுபடியும் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவன ஊழியரகளுக்கும் அந்தந்த நிறுவனங்களுக்கும் ஊதிய உயர்வு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளில் அண்மைக் காலமாக கருத்து வேறுபாடுகள் புறப்பட்ட வண்ணம் உள்ளன.
Monday, September 20, 2010
விஜய் தொலைக்காட்சியில் புது நிகழ்ச்சி 'காதல் மீட்டர்'
சென்னை, செப்டம்பர் 20 , 2010 :
நேயர்களின் பங்களிப்புடன் கூடிய பல்வேறு நிகழ்சிகளை வெற்றிகரமாக நடத்தி வரும் விஜய் டிவி, அடுத்ததாக காதல் மீட்டர் என்ற பெயரில் ஒரு புதிய நிகழ்ச்சியை அறிமுகம் செய்திருக்கிறது. ஒவ்வொரு வரமும் வெள்ளி, சனிக் கிழமைகளில் இரவு பத்து மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இதில் நடிகர் சுரேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சின்னத்திரை பிரபலங்களை (அதாவது தம்பதியரை) கேள்விகள் கேட்டு, அவர்கள் அளிக்கும் விடைகளின் அடிப்படையில் புள்ளிகள் கொடுத்து பின்னர் வெற்றி பெற்ற தம்பதிக்கு நாற்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள இல்லப் பயன்பாட்டுப் பொருட்கள் பரிசாக அளிக்கப்படும். இது போன்ற நிகழ்ச்சியில் நடிகர் சுரேஷ் கலந்து கொள்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
| Provided by website-hit-counters.com site. |
சிறப்பு பொருளாதார மண்டலம் துவக்குகிறது இன்போசிஸ்.
சென்னை, செப்டம்பர் 20 , 2010 :
இன்ஃபோசிஸ் நிறுவனம் தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல துறையில் இறங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறது. அந்நிறுவனம், கர்நாடக மாநிலத்தில் 24.4 ஹெக்டேர் பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க உள்ளது. இந்நிறுவனத்தைப் போலவே முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான விப்ரோவும் கர்நாடகாவில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இவ்விரு நிருவனகளுக்கும் சேர்த்து மொத்தம் 11 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல துறையில் இறங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறது. அந்நிறுவனம், கர்நாடக மாநிலத்தில் 24.4 ஹெக்டேர் பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க உள்ளது. இந்நிறுவனத்தைப் போலவே முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான விப்ரோவும் கர்நாடகாவில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இவ்விரு நிருவனகளுக்கும் சேர்த்து மொத்தம் 11 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
| Provided by website-hit-counters.com site. |
Subscribe to:
Comments (Atom)



