Saturday, August 21, 2010

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை கொடுத்த டிசிஎஸ்

சென்னை, ஆகஸ்ட், 21:

நாட்டிலேயே அதிக அளவாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்கிய நிறுவனம் என்ற பெயரை   டாடா கன்சல்டன்சி (டிசிஎஸ்) நிறுவனம்   பெற்றிருக்கிறது.   அந்நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி கணக்கெடுப்பின் படி 1 லட்சத்து 63 ஆயிரத்து 700 பணியாளர்கள்  பனி புரிவது கண்டறியப்பட்டுள்ளது.

அதிக பேருக்கு வேலை வைப்பு கொடுத்த விசயத்தில் இரண்டாவது இடத்தில் ஐ.பி.எம். நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் 1 லட்சத்து 55 ஆயிரம் பேர் உள்ளனர். சர்வதேச அளவில்  ஐபிஎம் நிறுவன அலுவலகங்களில் பணி புரிவோரின்  எண்ணிக்கை 4 லட்ச மாகும். இன்போசிஸ் நிறுவனத்தில் 1 லட்சத்து 14ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.

புதிய ஊழியர்களை பணியமர்த்துவதில்  ஐபிஎம்தான் முன்னணியில் உள்ளது. தனது அலுவலக பரப்பளவையும் அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது  10 லட்சம் சதுர அடிக்கு அலுவலகத்தை விஸ்தரித்துள்ள ஐபிஎம்,  3 ஆண்டுகளில், புனே, பெங்க ளூரு ஹைதராபாத் நகரங்களில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத்  தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment