ஆசியாவில் மத்திய தர வர்க்க குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவிதுள்ள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் அமெரிக்க , ஐரோப்பிய மதிய தர வர்க்க குடும்பங்களின் இடத்தை ஆசியர்கள் பிடித்து விடுவார்கள் என்றும் அது தெரிவித்துள்ளது. அவ்வங்கியின் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :
இந்தியாவில் 82 விழுக்காடு நடுத்தர வர்க்க குடும்பங்களின் . 1000 முதல் ரூ. 2000 வரை இருக்கிறது. . அதேசமயத்தில் , ரூ. 10,000 மேல் வருமானம் பெறுபவர் செல்வந்தர் என்று அழைக்கப் பெறுகிறார்கள். மாதம் ரூ.1,035ல் இருந்து ரூ.2,070 வரை ஊதியம் ஈட்டுபவர்களை கீழ் நடுத்தர வர்க்கம் என்றும், ரூ.2070ல் இருந்து ரூ.5,177 வரை சம்பாதிப்ப வர்களை நடுத்தர மத்திய வர்க்கம் என்றும், ரூ. 5177ல் இருந்து ரூ.10,354 வரை சம்பாதிப்பவர்களை உயர் நடுத்தர வர்க்கம் என்றும் அதில் வகைப்படுத்தி இருக்கிறார்கள். ஆக, ரூ. 10,354 சம்பாதிப்பவர்கள் செல்வந்தர்கள் என்று ஒரு புதிய வரைவிலக்கணத்தை ஆசிய வளர்ச்சி வங்கி கொடுத்திருக்கிறது. நம் நாட்டில் 82 விழுக்காடு பேர் (22.40 கோடி பேர்) கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்கிறது அந்த ஆய்வு.
No comments:
Post a Comment